கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட நித்தியகலாவின் கொலை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு சிறப்புக் குழுவினரால் ஒருவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசித் தரவின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரும் குற்றப் பிரிவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்