காய்ச்சலால் பீடிக் கப்பட்ட யாழ். பல்க லைக் கழக மாணவன் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார். இதயத்தில் ஏற்பட்ட கிருமித் தொற்றே இறப்புக்குக் காரணம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
விஞ்ஞான பீடத்தில் பயிலும் வவுனியாவை சேர்ந்த விஜயேந்திரன் நிந்துஜன் (வயது – 23) என்பவரே உயிரிழந்தார்.
இவர் கோண்டாவில் கிழக்கில் வீடு ஒன்றில் தங்கியிருந்து பயில்கிறார். சில நாள்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் அது பயனளிக்கவில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற நேற்றுச் சென்றுள்ளார்.
அங்கு அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு உடல்பாதிப்பு கடுமையாக இருந்தமை தெரியவந்தது. உடனடியாகவே அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அது பயனளிக்கவில்லை. சில மணித்தியாலங்களில் அவர் உயிரிழந்தார்.
அவரது இதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையின்பின்னர் விசாரணையில் கூறப்பட்டது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மற்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.