பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளே தமிழர்களின் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் கீழ் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தகுதியுடையவர்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

இதனால் தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லை எனவும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தலைமைத்துவத்தினை தெரிவுசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்