தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாளை நல்லூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி, சிறிலங்கா காவல்துறையினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.