குச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், முப்படைகளும், வெளிநாட்டுப் படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதல் ஒத்திகை நாளை திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகிய நீர்க்காகம் -9 கூட்டுப் பயிற்சி நாளை நிறைவடையவுள்ளது.

நாளை குச்சவெளியில் நடக்கவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகையில், சிறிலங்காவின் 2500 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும், பங்களாதேஷ். சீனா, இந்தோனேசியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துருக்கி, சாம்பியா, ஆகிய நாடுகளின் படையினரும் பங்கேற்கவுள்ளனர்.

சிறப்பு நடவடிக்கைப் படைகளின் போரிடும் திறனை உயர்த்தும் வகையில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்று, மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்தார்.

இதற்கிடையே குச்சவெளியில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிறிலங்கா இராணுவத் தளபதி ஆராய்ந்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்