சசிகலா விவகாரம்:பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார்.

கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6 வது முறை ஆகும். சசிகலா சிறைக்கு சென்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுகிறது. அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா அதிரடி தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று சசிகலா கையில் பையுடன் வெளியே சென்று வந்தது போல் ஒரு வீடியோ வெளியானது.

இந்நிலையில் தற்போது சிறை கண்காணிப்பாளர் நிக்காம் பிரகாஷ் அம்பரீட் நள்ளிரவில் மாற்றப்பட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்