சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சந்தித்துப் கேச்சு நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் சந்திக்கவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.