மூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா

நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்தோடு ஓரிரு நாட்களில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தை கலைக்க முடியாதென நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்