நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை பதவியில் இருந்து விலகவுள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விட்டு, மகிந்த ராஜபக்ச நாளை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நாட்டின் உறுதி நிலையை உறுதிப்படுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, நாமல் ராஜபக்ச கீச்சகப் பதிவில் கூறியுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் மனு மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம், இன்று மாலை மறுத்ததை அடுத்து, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்