சிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய

சிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் என மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற மகிந்த ராஜபக்ச தனது இந்த பழம் புளிக்கும் கதையை சொல்கின்றார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அறிக்கையிலுள்ள ஆபத்து என்னவென்றால் இது தமிழ் எதிர்ப்பு இனவாதத்தை கொண்டிருக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்