வவுனியாவில் கொடூரம் – 4 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை

வவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக குறித்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் இன்று மாலையே குறித்த சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. இவ் வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன் வேறு திருமணம் செய்த நிலையில் தற்போது அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். முன்னைய திருமணத்தின் போது குறித்த பெண்ணுக்கு 4 வயது சிறுவன் ஒருவர் உள்ளான். குறித்த சிறுவனை தற்போது திருமணம் செய்த இளைஞன் (சிறிய தந்தை) அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அச் சிறுவனை பார்க்கும் போது முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறியே சிறுவனை அடித்து துன்புறுத்துவதாக தெரியவருகிறது. இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர் இதனை அவதானித்து குறித்த சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிசில் ஒப்படைந்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிசார் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுவனை தாக்கிய சிறிய தந்தையாரை பொலிசார் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்