கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் – ராணுவத்திற்கு நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவ முகாமை வேறொரு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த பத்திரம் சமர்ப்பித்திருந்தார். அதற்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கயந்த கருணாதில இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்