ஒரே மேடையில் சுரேஸ் மற்றும் வரதர்!

இந்திய தூதரகம் முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதுடன் வெற்றியையும் பெற தொடங்கியுள்ளது.

அவ்வகையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் க.சற்குணநாதன் என்பவர்; எழுதிய “ஆழ்கடலும் அழகிய முகங்களும்” என்ற புத்தக வெளியீட்டில் வரதராஜப்பெருமாள்,சுரேஸ்பிறேமசந்திரன் இருவரும் 27 வருடங்களின் பின்னர் ஒன்றாக மேடையேறியுள்ளனர்.

கடந்த 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் ஆற்ற, ஆய்வுரையை சர்வேஸ்வரனும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரனும வழங்;கியிருந்தார்கள்.
.
இறுதியாக இந் நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் வரதராஜப்பெருமாள்; புத்தகங்களை வழங்கியுள்ளார்.

இன்னொரு புறம் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி தளபதியாக(?) இருந்த டக்ளஸினை இணைக்கவும் வரதராஜப்பெருமாள் மும்முரமாகியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்