புலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்!

விடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்திருந்தன.

இந்நிலையில் தனது மகனின் பெயரில் அண்மையில் கிளிநொச்சியில் 10 ஏக்கரிற்கும் அதிகமான நிலத்தினை பெயர் மாற்றம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

குறித்த காணிகள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்திருந்த நிலையில் அவற்றினை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவை சிறதரனின் மகனின் பெயரிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்ததற்காக சிறிதரனிற்கு குறித்த காணிகள் ரணிலினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்