கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், சிறிலங்கா பிரதமர் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.