500 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு!

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க வீசிய பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிக்காத நிலையில் இருந்த சக்திவாய்ந்த குண்டு ஜேர்மனின் ஹம்பேர்க் நகரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஹம்பேர்க்கில் சுமார் 6,000 அளவில் மக்களை வெளியேற்றிய பின்னரே அந்த குண்டு தீயணைப்பு வீரர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு ஜேர்மனியின் துறைமுக நகரமான ஹம்பேர்க்கில் கட்டிட வேலைக்காக கிடங்கு தோண்டும்போதே 1,000-பவுண்டு (500 கிலோ) எடையுள்ள இந்த குண்டு கண்டுபிடித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்