முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அனைத்து உறவுகளையும் அணி திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் காலை
●10. 30 -அகவணக்கம்.
●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில்
உறவுகளை இழந்த ஒருவர்).
●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும்
●10.35-மலரஞ்சலி.
●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு
சர்வமத தலைவர்கள்)
●10.55-மலரஞ்சலி தொடர்ச்சி