ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு சற்று முன் பிறப்பித்து, வேலூர் சிறைக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, பேரறிவாளனுககு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.