வித்தியாவின் வழக்கை துரிதப்படுத்துமாறும், விஜயகலாவைக் கைதுசெய்யுமாறும் ஆர்ப்பாட்டம்!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறும், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனைக் கைதுசெய்யுமாறும் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமhனது கொழும்பிலுள்ள ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தின்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கெதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்ற கயவர்களைக் கைது செய், விஜயகலா மகேஸ்வரனைக் கைது செய் போன்ற சுலோகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஆர்ப்பாட்டக் காரர்களால் மகஜர் ஒன்று ஐநா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்