கள்ளத்தொடர்பு:மனைவியின் காதலனை கொலைசெய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறை!

இலங்கைத் தமிழர் ஒருவரை பிரித்தானியாவில் படுகொலை செய்தமை தொடர்பில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பிரித்தானிய நீதிபதியினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு சனவரி மாதம் 21ஆம் திகதி 32 வயதாக சுரேன் சிவானந்தன் என்பவர் Co-op in St Leger Drive, Great Linford, Milton Keynes பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் Luton Crown நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்ற 38 வயதான இலங்கையரும் Milton Keynes பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்த இருவருக்கும் எப்போது தண்டனை வழங்குவதென திகதி ஒன்றை தீர்மானிப்பதற்காக இந்த வழக்கு நீதிபதியினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் மூன்றாவது நபரான Milton Keynes பகுதியை சேரந்த 24 வயதுடைய பிரசாந்த் தேவராசா என்பவருக்கு எதிராக, ”கடுமையான காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் தாக்குதல் மேற்கொண்டார்” என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கும் 10.2 என்ற பெரும்பான்மை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வழக்கில் நான்காவதாக குற்றம் சுமத்தப்பட்ட கிரேராஜ் யோகராஜா என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின்படி, படுகொலை செய்யப்பட்ட சுரேன் சிவானந்தன் கனடாவில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். பின்னர் Milton Keynes பகுதியில் வசித்த பெண் ஒருவருடன் தங்கியிருந்தார் என்று கூறப்பட்டது. குறித்த பெண், கொலையாளியான பாலச்சந்திரனின் கைவிடப்பட்ட மனைவியாவார்.

இந்த படுகொலைச் சம்பவத்தின் விசாரணைகளின்படி, பாலச்சந்திரன் சுரேனைக் கொலை செய்வதற்கு முன்னர் அவரை 12 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்ததோடு , Milton Keynes பகுதியில் வைத்து தொடர்ச்சியாக தாக்கி கொலை செய்துள்ளார்.

சுரேன் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த போது, பாலச்சந்திரனின் கைவிடப்பட்ட மனைவி சுரேனின் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார். ஆனால் அந்த அழைப்பிற்கு பாலச்சந்திரனே பதிலளித்துள்ளார்.

“அவனைப் பற்றி நீ ஏன் கேட்கிறாய்? உன்னால் ஒரு கணவருடன் வாழ முடியாமல் இன்னும் ஒருவனை அடைய முயற்சிக்கின்றாய். ஆகவே நீ மிகவும் தவறானவள். அவனுக்கு நான் என்ன செய்ய போகின்றேன் என்பதை நீ பார்க்க போகின்றாய்.” என பாலச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

இந்த உரையாடலுக்கு அடுத்த நாளான ஜனவரி மாதம் 21ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் சிவானந்தனின் சடலம் Great Linford பகுதியில் உள்ள கடை தொகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சுமார் 39 காயங்கள் காணப்பட்டுள்ளன.

இது தவிர அவரது உச்சந்தலையிலும் மோசமான காயம் காணப்பட்டுள்ளதுடன் அவரது கண்களும் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதாக பொலிஸாரின் விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்