தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டிய குடும்பத்தலைவி

மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத் தலைவி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தவறான முடிவு எடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த விஜயரஞ்சன் ரஞ்சினி(வயது 54) என்பவரே உயிரிழந்தவராவர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த குடும்பத் தலைவி கணவனை இழந்த நிலையில் தனது பிள்ளையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் இதனால் தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டி தவறான முடிவை எடுத்துள்ளார்.தீக் காயத்துக்குள்ளன அவரை உடனடியாக அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்தார் என கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்