பளை, முகமாலை வடக்கில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சிறுமி ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இனந்தெரியாத பொருள் ஒன்றைக் கண்டெடுத்து, இரும்பு எனக் கருதி கோடாலியால் பிளக்க முற்பட்டபோது அது வெடித்தது . அதில் முகத்திலும் காலிலும், கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த பெண் தற்போது மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.