கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் இராணுவச் சிப்பாய்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட முரண்பாடுகளாலேயெ நடந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத குழு ஒன்று இரு இராணுவச் சிப்பாய்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. அதில் இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பொலிஸார் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.