விரைவில் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும்: சீமான் பேச்சு

ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது;

நீட் தேர்வால் இனி தமிழன் யாரும் மருத்துவராக ஆக முடியாது. நீட் தேர்வு, விவசாயம், மீனவர் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. 2 மாதமாக வைகோ கனவில் கருணாநிதி வந்தால் அதன்பேர் கனவா? வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும்.

 

தமிழக மீனவர் மீது இலங்கை ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கும் அரசு ஏன் இலங்கை ராணுவம் எல்லைத் தாண்டி மீனவர்களை தாக்கும் போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கவில்லை.

கச்சத்தீவை மீட்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்