எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி

எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா.

புத்தாண்டு தினமான நேற்று, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”தேசிய பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எந்த நேரத்திலும் இராணுவம் முன்னுரிமையுடன் செயற்படத் தயாராக இருக்க வேண்டும்.

உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், முறையான பயிற்சிகள், தொடர்ச்சியான போர் ஒத்திகைகளில் ஈடுபட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்