மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு நேற்றைய தினம் புதிய அதிபர் கடமைஏற்றுள்ளார்

துணுக்காய் வலயத்தின் மையத்தில் அமைந்துள்ள 1AB தரத்தைச் சேர்ந்த மாங்குளம் மகாவித்தியாலய பாடசாலையானது இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிபர் இன்றி இயங்கி வந்தது

குறித்த பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி  கடந்த 17 ம் திகதி  பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் இணைந்து  பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்திருந்தனர்

இதேவேளை  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பிரதிநிதிகளுடன் உரையாடிய வடமாகாண கல்வி  அமைச்சின்  செயலாளர் குறித்த பாடசாலைக்கு  அதிபரை நியமிக்க தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை  அடுத்து  மாணவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்

இதேவேளை வடமாகாண  கல்வி  அமைச்சின் நடவடிக்கைக்கேற்ப நேற்று 20 ம் திகதி பாடசாலையின் முதல்வராக இரத்தினசிங்கம் கோகுலன் அவர்கள் பொறுப்பேற்றுகொண்டார்

இவர் யாழ் அச்சுவேலி மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராகவும் ,கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் கடமையவர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்