போர் குற்றவாளிக்கு இந்தியா வரவேற்பு!

ஜெனரல் சவேந்திர சில்வா டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை வசதி செய்து கொடுத்துள்ளது.

சவேந்திரசில்வா தனிப்பட்ட சொகுசு விமானத்தில் பயணிப்பது பற்றி தென்னிலங்கையில் சர்ச்சைகள் மூண்ட நிலையில் இந்தியா விளக்கமளித்துள்ளது

இந்திய இராணுவ அக்கடமியில் (IMA) நடைபெற்ற பாசிங் அவுட் அணிவகுப்பில் அவர் கடந்த 9 ஆம் திகதி பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிலையில் இந்தப் பயணம் இருந்தது.

இந்திய விமானப்படை, விஐபிகளுக்கான நிலையான நெறிமுறையின்படி, இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் மேற்குக் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் ஏவிஎஸ்எம், IMA இன் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா ஆகியோரிடமிருந்து வரவேற்பு கிடைத்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்