இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இன்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும். இவ்வாறு கதவுகள் திறக்கப்படும் போது சிறிய அளவிலான திறப்புகளே இடம்பெறும். இதனால் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது.
இருந்த போதிலும் குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.