யாழில் போதை பொருளுடன் தொடர்புடைய 102 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண காவற்துறை பிராந்தியத்தில் 70 பேரும், காங்கேசன்துறை காவற்துறை பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்