அதிபர் வேண்டாம் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருவப்பங்கேணியில் உள்ள பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கல்லூரி அதிபர் ஒத்துழைப்பு வழங்கினார் என்று கூறி அப்பகுதி மக்களால் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கல்லூரி மாணவர்கள் ,பெற்றோர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டங்கள் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும் , அதிபரும் வலய கல்வி பணிப்பாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதின் பின் இக்கல்லூரிக்கு புதிய அதிபராக சாந்தகுமார் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதிபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீண்டும் கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள் . மாணவர்களை பெற்றோர்கள் , கிராம அபிவிருத்தி சங்கு உறுப்பினர்கள் , மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் இணைந்து இன்று கல்லூரிக்கு முன்பாக கண்டன ஆர்பாட்டத்தினை இன்று மேற்கொண்டனர் .

இந்த ஆர்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் தற்போது பாடசாலை கல்வி நிர்வாகம் சீராக செயல்படுகின்ற நிலையில் மீண்டும் இவ்வாறன அதிபர்கள் கல்லூரிக்கு வருவதனால் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கபடுவதோடு , மாணவர்களின் மனநிலையும் பாதிப்புக்குள்ளாகும் எனவே இவ்வாறான அதிபர்கள் இக்கல்லூரிக்கு வருவதை பெற்றோர்களாகிய நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்க போதில்லை என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று கல்லூரிக்கும் முன்பாக முன்னெடுத்தனர் .

About இலக்கியன்

மறுமொழி இடவும்