கிழக்கு பல்லை வளாகத்தில் எழுச்சி நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வெற்றுக் கலன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகு ஒன்றில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று மாலை இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

மட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன. […]

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய விதங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பாடசாலைகள், ஆலயங்களின் […]

இளம் தாய் மரணம் – கணவன் கைது

மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வாகரை சின்னதட்டமுனி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சிவராசா சிரேந்தினி என்பவரே நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந் நிலையிலேயே இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வாகரை பொலிஸார் 24 வயதுடைய அவரது கணவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது […]

பிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது

துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை

மட்டக்களப்பு – திருமலைவீதியில் விபத்து! இளைஞர் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குச் சமீபமாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளைச்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின்

முகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.