மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

மட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் அஞ்சலி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்