மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்லும் போது இடம்பெற்ற கார் விபத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
44 வயதான விஜய் நாகராஜ் சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty International) இந்தியாவின் முன்னாள் இயக்குனராகும்.
அவர் சுமார் 10 வருடங்களாக இலங்கையின் சட்டம் மற்றும் சமூகம் ஆய்வு குழுவில் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான தலைவராக பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் உரிமைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக நாகராஜ் காணப்பட்டுள்ளார். நாகராஜின் குடும்பத்தினர் பெங்களூரில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.