தமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார மற்றும் போசனை துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் ஔடத நிறுவனம் தொடர்பாக தாம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அந்த நிறுவனங்கள் தமக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, விஜேதாச ராஜபக்ஷவுக்கு சுயாதீனமாக செயற்படுவதனால் எதிர்காலம் ஒன்று இருக்காது என அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அந்த கருத்தை வௌியிட்டார்.
அத்துடன் நாடு புதிய அரசியல் பயணத்தை நோக்கி காலடி எடுத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.