தென்மராட்சியில் சீதன கொடுமை தற்கொலை செய்த மணப்பெண்

29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. “திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில், சீதனம் போதாது சீதனத்தை அதிகரித்துத் தரவேண்டும் என்றும், அதிகரித்துத் தராவிட்டால் திருமணம் இடம்பெறாது என்றும் மணமகனின் உறவுகள் திடீரென நேற்று மணமகள் வீட்டாருக்குக் கூறினர்’’ என்றனர் உறவினர்கள்.

உயிரை மாய்த்த பெண்ணின் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் கொழும்பில் வாழ்கிறார். அவரது சகோதரி தென்மராட்சியில் வசிக்கிறார். சகோதரியே இந்தத் திருமணத்தைப் பேசி ஏற்பாடுகள் செய்திருந்தார். 12 லட்சம் ரூபா சீதனம் என்று பேசி முடிவாகியிருந்தது. அதன் பின்னரே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. திருமணத்துக்கான ஆடை, ஆபரணங்கள் வாங்கப்பட்டன. திடீரென மணமகனின் உறவினர்கள் சீதனக் காசு போதாது அதிகரிக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். தவறினால் இந்தத் திருமணம் இடம்பெறாது என்றும் எச்சரித்து விட்டனர். இந்தச் செய்தி மணமகளின் காதுக்கு எட்டியது.

பெற்றோரை இழந்த குறித்த பெண்ணுக்கு சீதனம் உட்பட அனைத்துச் செலவுகளையும் அவரது சகோதரியே ஏற்றுக் கொண்டிருந்தார். சீதனத் தொகையை அதிகரித்தால் தனது சகோதரிக்கு மேலும் பணக் கஷ்டம் ஏற்படுமே என்று மணமகள் மனஉளைச்சலுக்கு ஆளானார். ‘‘குளித்துவிட்டு வருகிறேன் என்றுகூறிக் குளியலறைக்குள் சென்ற மணப்பெண் நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை. என்ன ஏது என்று பார்த்தபோது. குளியலறையில் சடலமாக காணப்பட்டார்”’’ என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

சாவகச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்படட்டது. பொலிஸார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்தனர். ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. இன்று விசாரணை தொடரவுள்ளது.மணமகன் கொழும்பில் வசிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்