சிறிலங்காவில் எவ்வித முன்னேற்றமுமில்லை – ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி!

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்கா அரசாங்கம் கூடிய விரைவில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றையோ, நீதிப் பொறிமுறையையே அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் தென்படவில்லை.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமல் போனோருக்கான பணியக சட்டம் நிறைவேற்றப்பட்ட போது. நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதன் தொடர்ச்சியாக உண்மை ஆணைக்குழு நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வெறும் வரைவு நிலையிலேயே இருக்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்