சிறைச்சாலை பேருந்து விபத்து : சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் பலி

அநுராதபுரம் – பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

34 வயதான சிறைச்சாலை உத்தியோகஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பதுளை சிறைச்சாலையில் இருந்த சந்தேக நபர்களை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒப்படைத்து விட்டு மீண்டும் திரும்பி செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்