நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநாச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் குறித்த ஊடக சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றது, இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில்,

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. அனைத்து பொதுமக்கள், அமைப்புக்கள், அரசியல்வாதிகளையும் குறித்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். இதேவேளை சர்வதேச நாடுகளை சேர்ந்த எமது புலம்பெயர் உறவுகளும் எமக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அழைக்கின்றோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்