நடுத்தெருவில் குழந்தையை பெற்றுடுத்த சிறுமி!

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுமி நடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 17 வயது சிறுமியும் கிருஷ்ண ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பழக்கம் நெருக்கமாகவே பிரியா கர்பமாகியுள்ளார். இது குறித்து தனது காதலன் ராமிடம் பிரியா கூறியுள்ளார். பிரியா கர்பமாக இருப்பதை அறிந்த ராம் அவரை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.

பிரியா கர்பமாக இருப்பது அவருடைய குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது. 17 வயது மகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பது அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் தெரிந்தால் அவமானமாக இருக்கும் எனக் கருதியதால் குடும்பத்தினரும் பிரியாவை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதனால் சுமார் 4 மாதங்கள் தங்க வீடு இன்றி பிரியா தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார்.

பின்னர் நிறைமாத கர்ப்பிணியான பிரியா அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பிரியாவை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க மறுத்தனர். இதனால் மீண்டும் தங்க இடமின்றி தவித்த பிரியா கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் அந்த வழியாக சென்ற ஓம் பிரகாஷ் என்பவர் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த தாயையும் குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்