மாணவியை கொலை செய்த எனது மகனை தூக்கிலிடுங்கள் – தாயொருவர் கோரிக்கை

மாணவியொருவரை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுங்கள் என தாயொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்கமுவ கிரிபாவ பகுதியில் 17 வயது மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் தாய் முறுக்கு விற்பனையின் பின்னர் மதிய வேளையில் வீடு திரும்பிய போது, அவரது மகள் கைகள் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கட்டிலில் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சமன் குமார என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சமன் குமார எனபவர் மதுபோதையில் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மாணவியை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுமாறு 36 வயதான குசுமாவதி என்பவர் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்திற்கு முன்னால் இந்த கடிதத்தை வாசித்துக் காட்டுமாறு, கல்கமுவ உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த சமன் குமார என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்