திருமணம் செய்ய காதலன் மறுப்பு – 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!

திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்தது. காதலுக்கு சிறுமியின் குடும்பத்தார் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து 15 வயது சிறுமி தனது காதலினிடம் சென்று வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு சிறுமியின் காதலன் மறுப்பு தெரிவித்தார். உயிருக்கு உயிராக நேசித்த காதலன் கைவிட்டு விட்டானே என்ற விரக்தியில் மனமுடைந்த சிறுமி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் காதலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வலைவீசி தேடி வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்