தமிழ் மக்கள் பேரவை பகிரங்க உரையாடலுக்கு அழைப்பு!

இலங்கை அரசின் உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தினில் நடக்கவுள்ளது. இலங்கை அரசு தன் ஏவலாளிகள் ஊடாக திணிக்க முயலும் , ஒற்றையாட்சி முறைமையின் கீழான , வடக்கு கிழக்கு இணைப்பு அற்ற , ஒற்றையாட்சியின் கீழான பௌத்ததுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் மக்கள் பேரவை நடத்தும் பகிரங்க உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் தோறும் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.யாழ்.மாவட்ட நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்குநடக்க இருக்கின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்