வவுனியா ஏ9 வீதியில் வாகன வாகன விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்

வவுனியா, ஏ9 வீதி களுகன்னாமடுவில் இடம்பெற்ற வாகன வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

கொச்சிக்கடையில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஓடு ஏற்றிவந்த பாரவூர்தி களுகன்னாமடுவில் திடீரென ஏற்பட்ட வாகன கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹன்டர் ரக் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ட பாரவூர்தியின் மேல் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ஒருவர் பலியனதுடன் நான்கு பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக இவ்விபத்தை ஏற்படுத்திய ஹன்டர் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா இரட்டை புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்