புதிய அரசமைப்பு நிறைவேறியே தீரும் மைத்திரி மட்டக்களப்பில் திட்டவட்டம்

புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்­றில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்­றப்­ப­டும், இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­டக்­க­ளப்­பில் தெரி­வித்­தார். அங்­குள்ள அர­சி­யல் தரப்­பி­ன­ரைச் சந்­தித்­துப் பேசி­ய­போது அவர் திட­மாக இத­னைத் தெரி­வித்­தார் என்று நம்­ப­க­ர­மா­கத் தெரி­ய­வந்­தது.

மட்­டக்­க­ளப்பு, கர­டி­ய­னாறு பகு­தி­யில் விவ­சாய அமைச்­சால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சேவைக்­கா­லப் பயிற்சி நிலை­யத்­தைத் திறந்­து­வைக்­கும் நிகழ்­வில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று பங்­கேற்­றார். கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட அர­சி­யல்­வா­தி­கள் இதில் பங்­கேற்­ற­னர்.

கிழக்கு மாகாண சபை­யின் அர­சி­யல் செயற்­பா­டு­கள் குறித்து தனிப்­பட்ட முறை­யில் முதல்­வ­ரி­டம் கேட்­ட­றிந்த அரச தலை­வர், அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்ட மூலத்­தில் மேலும் சில திருத்­தங்­கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன என­வும், அதற்கு கிழக்கு மாகாண சபை ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என­வும் கோரிக்கை விடுத்­தார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும் இதன்­போது பேசப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்