அனிதாவுக்கு நீதிகேட்டு போராடங்கள்…தமிழகத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சிறப்பு பாதுகாப்பு!

நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்ட மாணவி அனிதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது இறப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்றும் காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தொடர்ந்து வெடித்து வரும் போராட்டங்களால், தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்