தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

குவாலியர் நகரை அடுத்த பைசோலி பகுதியில் கடந்த புதன்கிழமை முன் நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது வீட்டில் தாய் மற்றும் சகோதரருடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது, மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இரண்டு பேர் அவளது தாய் மற்றும் 14 வயது சகோதரனை துப்பாக்கி முனையில் மிரட்டினர். மூன்றாவது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பைசோலி போலீசார் தெரிவித்தனர். மூன்று பேரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள். இதில், பாலியல் வன்கொடுமையை செய்த நபர் ஜன்வர் சிங் குஷ்வாகா(36), அவருக்கு உதவி செய்தது ராஜூ குஷ்வாகா(25), ராம்னிவாஷ்(24) என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை அன்று தான் காவல் நிலையத்திற்கு சிறுமியின் பெற்றோர்கள் கொண்டு சென்றனர். அதற்கு முன்பாக உள்ளூர் பஞ்சாயத்து மூலம் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால் அங்கு நியாயம் கிடைக்கவில்லை.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரே மாதத்தில் இரண்டாவது பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்