பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புபெற்ற செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா ஆரம்பம்!

ஈழத்தமிழர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் முருகன் ஆலயங்களில் தனிச்சிறப்பு பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலையத்தின் தேர் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்துள்ளது.

ஈழத்துச் திருச்செந்தூர் என்று போற்றப்படும் செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று பல்லாயிரம் பக்தர்களின் அரோகரா கோசங்கள் பேரொலியா எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

பிராமணர்கள் அல்லாதவர்களால் பூசை வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் தனிச்சிறப்புப் பெற்ற திருத்தலமாக விளங்கும் செல்வச் சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்துவரும் முருகப்பெருமான் தேரேறி வந்து அருளாட்சி செய்யும் அழகை காண ஈழத்திரு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நாடி வந்த பக்தர்களின் பரவசத்தின் நடுவே தேர் திருவிழா பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.

காவடிகள் எடுத்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் தமது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்க சிதறு தேங்காய்கள் உடைபட கற்பூர ஆராத்திகள் சுடர்விட அழகன் முருகன் தேரேறி வருகின்ற அழகே தனி அழகுதான். இந்த பக்திப் பேரழகை காண கோடி கண்கள் வேண்டும்.

உலகெங்கும் பரவி வாழ்ந்துவரும் சைவப் பெருமக்களாகிய ஈழதேசம் வாசகர்களும் செல்வச் சந்நிதியான் அருளை பெற்று நல்வாழ்வு பெறுக.

ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா!

செய்தி மற்றும் புகைப்படங்கள்-காணொளி ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்