பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தாகாது : கிரியெல்ல சபையில் அறிவிப்பு

முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அவரது சொந்த கருத்தே தவிர அது அரசாங்கத்தின் நிலைபாடு கிடையாது என சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் இரு வாரங்களில் விரிவான விளக்கமொன்று வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் பொன்சேகா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்