சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து எண்ணெய் கிடங்கு மீட்பு

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து எண்ணெய் கிடங்கை அரசுப் படையினர் மீண்டும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவின் முக்கிய நகரமான தெய்ர் அல் ஸோர் ((Deir Al Zor)) பகுதியை அரசுப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

தெய்ர் நகருக்கு அருகில் இருந்த அல் மயாதீன் ((Al Mayadeen)) என்ற நகரத்தை கைப்பற்றிய அரசுப் படையினரை முன்னேறவிடாமல் ஐஎஸ் இயக்கத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட சண்டையில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இறுதியாக தெய்ர் அல் ஸோர் அருகில் உள்ள டெய்ம் ((Teim oilfield)) எண்ணெய் கிடங்கை அரசுப் படையினர் மீட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்