கிளிநொச்சி பாரதிபுரத்தில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்று மாலை நடந்துள்ளது. அதில் சிலர் காயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழு மோதலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.